TamilsGuide

ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார் ஜீவன் தொண்டமான்

இலங்கை நாட்டின் 09 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 04 மணி வரை இடம்பெறவுள்ளது

அந்தவகையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தியுள்ளார்

கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, குறித்த வாக்களிப்பு நிலையத்திற்க்கான தனது முதலாவது வாக்கினை காலை 07 மணிக்கு செலுத்தியிருந்தார்
 

Leave a comment

Comment