TamilsGuide

மட்டக்களப்பில் 70 வீதமான வாக்கு பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 09வது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் இன்றைய வாக்களிப்பில் சுமார் 70வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவடட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு,பட்டிருப்பு,கல்குடா தேர்தல் தொகுதிகளில் இன்றைய தினம் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இன்றைய தினம் 4இலட்சத்து 49ஆயிரத்து 686 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்தனர் .இதன் கீழ் கல்குடா தொகுதியில் 1,34,104 பேரும், மட்டக்களப்பு தொகுதியில் 2,10,293பேரும் பட்டிருப்பு தொகுதியில் 1,05,289 பேரும் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்தனர்.
 

Leave a comment

Comment