TamilsGuide

கல்லடி பேச்சி அம்மன் ஆலயத்தில் தீ பரவல்

மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் இன்று(20) வெள்ளிக்கிழமை இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

கல்லடி உப்போடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது.

தற்போது தீ அணைக்கப்பட்ட நிலையில் எவருக்கும் காயங்களோ உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment