TamilsGuide

பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ விடுத்துள்ள விசேட அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் சட்டத்துக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்குட்பட்ட செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு 63 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 3083 பொலிஸ் நடமாடும் சேவை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 12,400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதகவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றும், நாளையும்,  269  வீதிகளில் விசேட வீதி தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்படுமாயின் அதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரப்படையினர் பணியில் அமர்த்தப்படுவர் எனவும், கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் கலகத்தடுப்பு பிரிவுகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அடையாளம் காணப்படும் பகுதிகளில் முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலங்களில் சில இடங்களுக்கு விசேட பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச சபைகளை அடிப்படையாக கொண்டு மின் விநியோகிக்கும் மத்திய நிலையங்கள், நீர் விநியோகப் பிரிவுகள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவதுடன் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சிவில் பாதுகாப்பு படையினரும் 2,500 க்குமஇ; மேற்பட்ட பொலிஸ் விசேட அதிரப்படையினரும் கடமையில் ஈடுப்படுப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment