TamilsGuide

இதுவரை வவுனியாவில் 30% வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளன

நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் நாடுமுழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்

இந்நிலையில் வவுனியாவில் இன்று காலை முதல் பொதுமக்கள் வாக்குகளை அளித்துவரும் நிலையில் இன்று காலை 10.15 மணிவரைக்கும் 152 வாக்களிப்பு நிலையங்களில் 30% வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான பி.எ சரத்சந்திர தெரிவித்துள்ளார்

இதேவேளை இதுவரை எந்த ஒரு தேர்தல் முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கபெறவில்லை என்பதுடன் 4மணிக்கு அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இருந்து வாக்குப் பெட்டிகள் வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு மாலை 4.30 மணியளவில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அதற்கான அரச உத்தியோகத்தர்கள் தயாராக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
 

Leave a comment

Comment