TamilsGuide

மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி விடுதியில் உள்ள மாணவர்கள் செப்டெம்பர் மாதம் 23ம் திகதி முதல் தங்களுடைய விடுதிகளுக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அண்மையில் தற்காலிகமாக மூடுவதற்கு நவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment