TamilsGuide

யாழில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  யாழ் மாவட்டத்தில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து,907 வாக்காளர்களுமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்து 93ஆயிரத்து 187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment