TamilsGuide

ஜனாதிபதித் தேர்தல்- முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்தை அண்மித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 208 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் , அந்தவகையில், ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை 4, 945 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 1,515 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 3,429 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும், இந்தக் காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment