• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பசில் ராஜபக்ஷ துபாய்க்கு திடீர் பயணம்

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை பயணமாகியுள்ளதாக நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

அதன்படி இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளதுடன் அவர் அங்கு இருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேளை நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply