TamilsGuide

ஒன்றாரியோவில் குறுஞ்செய்தி ஊடான மோசடிகள் குறித்து எச்சரிக்கை

ஒன்றாரியோவில் குறுஞ்செய்தி ஊடாக மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜயன்ட் டைகர் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்குவதாகக் கூறி குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

30 டொலர் பெறுமதியான பரிசு கிடைக்கப் பெறுவதாக கூறி மோசடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மார்க் மார்டின் என்ற நபர் இந்த குறுஞ்செய்தி பற்றிய மோசடியில் சிக்கவிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த 30 டொலர் பரிசினை பெற்றுக்கொள்வதற்கு வங்கி விபரங்கள் கோரப்பட்ட போது தாம் எச்சரிக்கை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த குறுஞ்செய்தி ஜயன்ட் டைகர் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டவை அல்ல என குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment