TamilsGuide

புதிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புப் பெருக்கங்களுக்கு ஒன்ராறியோ வழியேற்படுத்துகிறது

புதிய வணிகங்களை ஈர்ப்பதற்கும், நல்ல ஊதியம் தரும் வேலைகளை உருவாக்குவதற்குமான களத்தினைத் தயார்ப்படுத்தும் பொருளாதார உயர்வுத் திட்டங்களுக்கென 75 மில்லியன் டொலர்களை ஒன்ராறியோ முதலீடு செய்துள்ளது. பெரும் முதலீட்டாளர்களை  ஒன்ராறியோவை நோக்கி வரவைக்கும் இம்முன்முயற்சியானது தொழில் வளர்ச்சிக்கான களத்தைத் அமைத்துக்கொடுக்கும் திட்டமாக அமையும். 

வளர்ச்சிக்கான செயல்முறையைத் துரிதப்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் ஒன்ராறியோவை அனைத்துலக மட்டத்தில் முன்னணியில் நிறுத்த உதவும். இது பற்றி அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, “ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, வலுவான சமுகத்துக்கான புதிய முதலீடுகளுக்கு அடித்தளமிடுவதில் எமது அரசு உறுதிபூண்டுள்ளது” என்றார். இம்முயற்சிகள் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதில் ஒன்ராறியோ கரிசனை செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது.
 

Leave a comment

Comment