TamilsGuide

டீல் அரசியலை சஜித் நிறுத்த வேண்டும் – தலதா அதுகோரள

மக்கள் ரணிலைத் தோற்கடித்தால் மீண்டும் அவர் உங்களை மீட்க வரப் போவதில்லை என்பதை நினைவில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள தொிவித்தாா்.

பதுளையில் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”பணம் செலுத்த முடியாமல் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்களில் இருந்து, காஸை கரைக்குக் கொண்டு வந்தவர் ரணில்.

ஜ.எம்.எப் உடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காது என எதிரணியுள்ள நிபுணர்கள் கூறினர்.

வெளிநாடுகள் கடன் தாராது என்று கூறியிருந்தனர். இவற்றை எல்லாம் ரணில் பொய்யாக்கினார்.

ரணில் ராஜபக்ஷ என்று ஊடக சந்திப்புகளில் விமர்சித்தனர். அவர்களின் குற்றச்சாட்டுகள் இன்ற பொய்யாகியுள்ளன.

ரணில் – ராஜபக்ஷ அல்ல சஜித் – ராஜபக்‌ஷ என்று தான் கூற வேண்டும். டீல் அரசியலை சஜித் நிறுத்த வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவிடம் டீல் அரசியல் கிடையாது. கடந்த காலத்தில் ரணிலை வங்கித் திருடன் என்று விமர்சித்தவர்கள்தான் தேடி வந்து ஜனாதிபதி பதவியைக் கொடுத்தார்கள்.

மக்கள் ரணிலை தோற்கடித்தால் மீண்டும் அவர் உங்களை மீட்க வரப் போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment