TamilsGuide

வீட்டில் அடுப்பெரியும் போது தாய்மார்கள் ரணிலைத்தான் நினைப்பார்கள் – ஹரீன் பெனாண்டோ

பிரசாரக் கூட்டங்களை நடத்தித் தான் ரணிலை வெல்ல வைக்கவேண்டிய தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஹரீன் பெனாண்டோ தொிவித்துள்ளாா்.

பதுளையில் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”சஜித்தின் இயலாமை காரணமாகத்தான் அநுரவின் கூட்டத்திற்கு மக்கள் செல்கின்றனர்.

தமது பனியனிலும் உள்ளாடையிலும் ஓட்டை இருப்பதாக ஜே.வி.பியினர் சொல்கின்றனர். அவர்களின் மூளையிலும் ஓட்டையுள்ளது என்பதை மக்கள் புரியவேண்டும்.

வெள்ளைக்காரனுடன் பேசக் கூட அநுரவுக்குத் தெரியாது. நாட்டை ஆட்சி செய்வதற்கான, எந்தவொரு அனுபவமும் அநுரவிற்கு கிடையாது.

ஒரு பிரதேச சபையைக் கூட நிர்வகிக்க முடியாத ஜே.வி.பியினால் எப்படி நாட்டை ஆட்சி செய்ய முடியும் என நான் கேட்கிறேன்.

பிரசாரங்களை கூட்டங்களை நடத்தி ரணிலை வெல்ல வைக்கவேண்டிய தேவையில்லை. வீட்டில் இருந்தாலும் ரணிலால் வெல்ல முடியும்.

வீட்டில் அடுப்பெரியும் போது வீட்டிலுள்ள தாய்மார்கள் ரணிலைத்தான் நினைப்பார்கள்” என ஹரீன் பெனாண்டோ மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment