• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல்! பிரசாரக் காலம் நிறைவ-தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாகதேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

அத்துடன், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a Reply