TamilsGuide

தேசிய மக்கள் சக்தியைக் கண்டு ரணில் – சஜித் அச்சம்! – டில்வின் சில்வா

தோல்விக்கு அஞ்சும் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்திக்கு சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தொிவித்தாா்.

தோ்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”தேர்தல் தோல்விக்கு அஞ்சும் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இன்று தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்திக்கு சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டு மக்கள் இன்று தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர். எனவே தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.

கள்வர்கள் இன்று கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாட்டின் கொள்ளையர்கள் இரண்டாக பிரிந்து தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுடனும் சஜித் பிரேமதாசவுடனும் இணைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. ஒரு புறம் ரணில் விக்ரமசிங்க மறுபுறம் சஜித் பிரேமதாச தேர்தலில் முன்னிலையாகியுள்ளனர்.

மொட்டுத்தரப்பினர் இரண்டாக பிளவடைந்து ரணிலுடனும் சஜித்துடனும் இணைந்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஊழல் மோசடிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் இடமில்லை” என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment