TamilsGuide

மட்டக்களப்பில் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சாரக் கூட்டம்

மட்டக்களப்பு கல்லடியில் நாளை நடைபெறவுள்ள,பொது வேட்பாளர் அரியநேத்திரனின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்  கோ. கருணாகரன் தலைமையில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில்  கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் உட்பட குழுவினர் இன்று  பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து துண்டுபிரசுரம் விநியோகித்து பிரச்சார நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது மக்களிடம் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 

Leave a comment

Comment