TamilsGuide

கிளப் வசந்த கொலைச் சம்பவம்-மேலும் ஒருவர் கைது

வர்த்தகர் கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தர்கா நகரில் வசிக்கும் 24 வயதுடையவர், அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்தவர் ஆவார் என போலிஸ்சார் தெரிவித்துள்ளனர்

ஜூலை மாதம் அதுருகிரியவில் பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டிருந்த சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தா மற்றும் மற்றுமொரு நபர் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment