TamilsGuide

ஆய்வக பரிசோதனைக் கட்டணத்தை குறைத்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஆய்வக பரிசோதனைகளின் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரத்னசிறி ஏ.ஹேவகே தெரிவித்துள்ளார்.

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்கள் தொடர்பான பரிசோதனைகளுக்கு இந்த விலைக் குறைப்பு பொருந்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நோயாளிகளின் நிதிச் சுமையை எளிதாக்குவதே இந்த முயற்சியின் முதன்மையான நோக்கமாகும்.

வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்ட 40 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வைத்தியசாலை நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வைத்தியசாலை ஆய்வகம் 24 மணிநேரமும் இயங்குகிறது, நோயாளிகளுக்கு தரமான மற்றும் திறமையான சேவையை வழங்குகிறது.

இந்த 50 சதவீத சோதனைச் செலவுக் குறைப்பு, நோயாளிகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதன் மூலம் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment