TamilsGuide

யாழ். வணிகர் கழகத்தினருடன் அரியநேத்திரன் விசேட சந்திப்பு

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கழக காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 75 வருடங்களாக தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பலவகையில் போராடி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் இதுவரை வழங்கவில்லை எனவும் பல ஒப்பந்தங்கள், பல வட்டமேசை மாநாடுகள் பல பேச்சுவார்த்தைகள், பல வாக்குறுதிகள் நடைபெற்றும் எதையும் நிறைவேற்றவில்லை எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாது, அனைவரும் ஏமாற்றப்பட்டதாகவும், எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தீர்வுக்கான புதிய அணுகுமுறையாக அணுகி ஒவ்வொரு தமிழ் மக்களும் சங்குச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment