• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் வருகை

இலங்கை

இந்த மாதத்தின் முதல் 11 நாட்களில் மாத்திரம் 44,000ற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் 44,977 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், பிரித்தானியா, ஜேர்மனி, சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply