• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் - வவுனியாவில் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,500 பொலிஸார் குவிப்பு

இலங்கை

வவுனியாவில் ஜனாதிபதித்தேர்தல் கடமைகளுக்காக 1,500பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிஸார் தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனையதரப்புக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 12 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் மத்தியநிலையமாக வவுனியா சைவப்பிரகாசா மகளீர்கல்லூரி செயற்ப்படவுள்ளதுடன்இ அதற்கான உரிய ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதைவேளை தேர்தல்கடமைகளுக்காக 1500ற்கும் மேற்ப்பட்ட பொலிசார் வவுனியாமாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல்கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கான போக்குவரத்து ஏற்ப்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 

Leave a Reply