• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாதாரணதர பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு

இலங்கை

இரண்டு வாரங்களுக்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு சில காரணங்களினால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாமல் உள்ள நிலையில், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகளை எதிர்பாருங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள், கால அட்டவணைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் என்பனவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்த முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாதக்கணக்கில், வருடங்களில் பிற்போடப்பட்ட உயர்தரப் பரீட்சை இந்த வருடத்திலேயே நவம்பர் 25-ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2025 ஆம் வருடத்தின் பரீட்சைகள், கால அட்டவணைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் ஆகியவை தாமதமின்றி ஒன்றாகச் செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply