• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெர்மனியில் பாலம் உடைந்தது

சினிமா

கிழக்கு ஜெர்மனியின் சக்சோனி மாகாணம் டிரெஸ்டன் நகரில் எல்பே ஆறு ஓடுகிறது. பழைய டிரெஸ்டன் மற்றும் புது டிரெஸ்டன் நகரங்களை இணைக்கும் வகையில் எல்பே ஆற்றின் குறுக்கே 100 மீட்டர் அளவில் 'கரோலா' பாலம் கட்டப்பட்டிருந்தது.

கார்கள், கனரக வாகனங்கள் போக்குவரத்திற்காக ஒரு பகுதியும், டிராம்கள், சைக்கிள்கள் பாதசாரிகள் செல்வதற்காகவும் இந்த பாலத்தில் வசதி செய்யப்பட்டிருந்தது. நகரின் முக்கிய போக்குவரத்து அம்சமாக இந்த பாலம் விளங்குகிறது.

இந்தநிலையில் திடீரென இந்த பாலம் பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியது. இரவில் இந்த விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பாலம் உடைந்ததன் காரணமாக அங்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

இதனால் சாலை, டிராம் மட்டுமின்றி சுற்றுலா படகுகள் போக்குவரத்தும் தடைப்பட்டது.
 

Leave a Reply