TamilsGuide

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் அல்பிட்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதுடன், அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment