TamilsGuide

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை தபால் மூலம் வாக்களிக்காத வாக்காளர்களுக்கு இன்றும் நாளையும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை அந்தந்த மாவட்ட செயலகங்களில் தபால் மூல வாக்களிப்புகளை மேற்கொள்ள
முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 4, 5, 6 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்ற அரசு ஊழியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலதிகமாக இரண்டு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 7 இலட்சத்து 36 ஆயிரத்து 589 அரச ஊழியர்கள் தபால்மூல வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக இன்றும் நாளையும் மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment