• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை-பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுவரொட்டிகள், பதாகைகள், பிரசுரங்களை வெளியிடுவது அல்லது பரீட்சை வினாக்களில் வினாக்கள் வழங்கப்படும் அல்லது அதுபோன்ற கேள்விகள் வழங்கப்படும் போன்றவற்றை வைத்திருப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்

இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply