TamilsGuide

வவுனியாவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில்  இயங்கிவரும் மரக்காலையொன்றில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரக்குற்றிகளுடன்  மரக்காலை உரிமையாளரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொலிஸாருக்குக்  (DCDB) கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment