• Welcome to TamilsGuide
செய்திகள் 1

50 வீதம் நிறைவு பெற்றது வாக்குச்சீட்டு அச்சிடும் பணி

இலங்கை

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் வரை நிறைவடைந்துள்ளதாக  அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அச்சிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை அடுத்த வாரத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply