• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் ஜனாதிபதி ரணிலை ஆதரித்து பிரச்சாரம்

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா நகரில் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று வவுனியாவில் முன்னடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் தலைமையில் குறித்த நடவடிக்கை இன்றுகாலை இடம்பெற்றது.

இதன்போது வவுனியா தினச்சந்தை, நகர வர்த்தகநிலையங்களுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதேவேளை குறித்த நடவடிக்கை நாடளாவியரீதியில் இன்றையதினம் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply