• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போதியளவு நெல் உற்பத்தி செய்ப்படுவதில்லை – விவசாயிகள் மீது குற்றச்சாட்டு

இலங்கை

விவசாயிகள் நெல் அறுவடைகளை போதியளவு தமது சபைக்கு விற்பனை செய்வதில்லை என நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவுக்காக ஆறு மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சர்கள் சபை தீர்மானித்ததுடன், அதில் 500 மில்லியன் ரூபா நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 36 நெல் களஞ்சியசாலைகளுக்கு அறுவடையை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அரிசி சந்தைப்படுத்தல் சபை ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், தனியார் துறையினர் அரிசியை அதிக விலைக்கு கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply