• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் பலர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை

பிபில – அம்பாறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று இரவு  இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிபில – அம்பாறை வீதியில், நாகல பிரதேசத்தில் பிபிலையில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், பின்னால் அதே திசையில் சென்ற பஸ்ஸும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரூந்துக்களில் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் சிலர் பயணித்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள்  பிபில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply