• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு துறைமுகத்தில் மனித எலும்புகள் –அகழ்வு பணிகள்

இலங்கை

துறைமுக அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தின் போது கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த இடத்தில் அகழ்வு பணி இன்று (05) ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (04) உத்தரவிட்டுள்ளார்.

துறைமுகப் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதவான் ஒருவரின் மேற்பார்வையிலும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைமுக பொலிஸாருக்கு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply