• Welcome to TamilsGuide
செய்திகள் 1

3 மில்லியன் சிகரெட்டுகள் அழிப்பு-இலங்கை சுங்கம்

இலங்கை

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 மில்லியன் சிகரெட்டுகளை அழிக்க இலங்கை சுங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை புகையிலை நிறுவனத்தினால் சுங்கத் திணைக்களத்தின் மேற்பார்வையில் இந்த சிகரெட்டுகள் அழிக்கப்பட உள்ளதுடன் இதன் பெறுமதி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளில் பிரபல வர்த்தகநாமங்கள் உள்ளடங்குவதாகவும், மோசடி செய்ய முயற்சித்த மொத்த வரித் தொகை 480 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் எனவும் சுங்க அதிகார சபை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply