• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கனடா

கனடாவில் பெல்கிராவிய இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபர் அல்லது சந்தேக நபர்களை கண்டு பிடிப்பதற்காக தடயவியல் நிபுணர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply