• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் – அநுர குமார

இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் திருகோணமலையில் 99 எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்தி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தச்சுத் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்க தமது அரசாங்கம் முற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply