• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இம்முறை தேர்தலுக்கு 15,000 வாக்குப்பெட்டிகள்

இலங்கை

செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள  ஜனாதிபதித் தேர்தலுக்கு 15,000 ற்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் தற்போது 25,000 வாக்குப் பெட்டிகள் உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டின் நீளத்திலேயே இந்த ஆண்டுக்கான வாக்குச் சீட்டு குறியிடும் தாள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 26 அங்குலம் ஆகும்.
 

Leave a Reply