• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டக் போர்ட் தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு

கனடா

ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் முற்போக்கு கன்செர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகின்றது.

முதல்வர் டக் போர்ட் மீதும் கட்சி மீதும் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்காளர்கள் மத்தியில் போர்ட் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு நீடிப்பதாக லியாசியோன் ஸ்டேடஜிஸ் என்ற கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 40 வீதமான மக்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

லிபரல் கட்சிக்கு 27 வீதமான ஆதரவும் என்.டி.பி காட்சிக்கு 21 வீத ஆதரவும், பசுமை கட்சிக்கு ஆறு வீத ஆதரவும் காணப்படுகின்றது.

இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பை விடவும் இம்முறையை டக் போர்ட் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு இரண்டு வீத ஆதரவு அதிகரித்துள்ளது. 

Leave a Reply