• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டைப் பொறுப்பேற்க 38 பேர் போட்டியிடும் நிலையினை உருவாக்கியவா் ரணில் – ராஜித

இலங்கை

ஆட்சியை ஏற்கத் தயங்கிய நிலையில் இருந்து தற்போது நாட்டைப் பொறுப்பேற்க 38 பேர் வரும் நிலைக்கு இந்த நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தொிவித்தாா்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜித சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 பேர் முன்வந்துள்ளனர். அவர்கள் பெருமளவு செலவு செய்து பிரசாரம் செய்கின்றனர்.

2022 இல் இவர்கள் எவரும் நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. அன்று நான் எதிர்க்கட்சித் தலைவருடன் இருந்தேன்.
அவரை அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினோம்.

அன்று ஹர்ஷ டி சில்வா போன்றவர்கள் அதிகாரத்தில் கை வைத்தால் சுட்டுவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவரை பயம் காட்டினர்.
மக்கள் வரிசைகளில் அல்லாடினர். துறைமுகத்துக்கு வந்த கப்பல்கள் திரும்பிச் சென்றன.

ஒரு நாள் நாட்டு மக்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாமல் இருந்தனர். ஒரு சதம் கூடம் இல்லாத நாட்டைத் தான் ரணில் விக்ரமசிங்கவிடம் கிடைத்தது.

ரணில் ஏற்றுக்கொண்ட பின்னர் சஜித்துக்கும் பதவி மீது ஆசை வந்தது. மறுமுனையில் அனுரவுக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்தார்.

அனுரவும் ஓடி மறைந்தார். சரத் பொன்சேகாவையும் அழைத்தார். அவரும் நிபந்தனைகளை கூறினார்.

அன்று ஒருவரும் ஆட்சியை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அப்படியிருந்த நாட்டை பொறுப்பேற்க 38 பேர் வரும் நிலைக்கு இந்த நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேலும் தொிவித்தாா்.
 

Leave a Reply