• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னார் சட்டத்தரணிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்காரணமாக இன்றையதினம் முன்னெடுக்கப்படவிருந்த விசாரனைகள் பிற்போடப்பட்டுள்ளன.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பு நகரில் அனாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்தனர்.

இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த நிலையில் எந்தவித வழக்கு விசாரனைகளுக்கும் சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இதேவேளை நாளைய தினமும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
 

Leave a Reply