• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகாதார பட்டதாரிகளுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

இலங்கை

இணை சுகாதார பட்டதாரிகளின் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இணைந்து இன்று நடத்தவுள்ள போராட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இணை சுகாதார பட்டதாரிகளின் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதன்படி, இன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஒன்று கூடி அதனைச் சூழவுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் நடைபாதைகளை பாவனைக்கு பயன்படுத்த முடியாதவாறு மறித்து போராட்டம் நடத்துவதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
 

Leave a Reply