• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேசிக்கொள்ளாத அண்ணனும் தம்பியும்... தவிக்கும் இளவரசி கேட்

தன் கணவரான இளவரசர் வில்லியமும் அவரது தம்பி ஹரியும் பேசிக்கொள்ளாததால், அவர்களுக்கு நடுவில் சிக்கி, உணர்வு ரீதியாக இளவரசி கேட் அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது.

இளவரசர் ஹரி தன் மனைவி மேகனுடன் வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, தம்பதியர் ராஜ குடும்பத்தைக் குறித்து முன்வைத்த மோசமான விமர்சனங்களால் ஹரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையில் பெரும் பிளவு உருவாகிவிட்டது.

ஆனாலும், தன்னை சோந்த சகோதரிபோல் நடத்திய ஹரியை மறக்க முடியாமல் கேட் தவிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

’ராஜ குடும்ப மும்மூர்த்திகள்’ என ஒரு காலத்தில் ஊடகங்கள் விமர்சிக்கும் அளவுக்கு, எங்கு சென்றாலும் வில்லியம், கேட் தம்பதியர், ஹரியுடன் சேர்ந்தே செல்லும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

இன்று எல்லாம் மாறிவிட்டது. என்றாலும், கேட் கவலையாக இருந்தபோதெல்லாம் அவரை உற்சாகப்படுத்திய தன் தம்பியைப்போன்ற ஹரியை மக்கள் இன்று மறந்துபோனார்கள்.

வில்லியமை காதலிக்கத் துவங்கிய நாட்களில், கேட்டை, அவரும் தங்களில் ஒருவர், என உணரவைக்க, தங்கள் குடும்பத்துக்குள் வரவேற்க, தன்னால் இயன்றதற்கும் அதிகம் செய்தவர் ஹரி.

அதையெல்லாம் கேட்டால் எளிதில் மறக்கமுடியவில்லை. அவரது மனைவியால் குடும்பத்துக்குள் பிளவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், ஹரி இடத்தில் வில்லியம் இருந்திருந்தால், அவரும் தன் மனைவிக்கு ஆதரவாகத்தான் நடந்திருப்பார் என அவர் கருதுகிறார். ஆகவே, ஹரியை குறை சொல்ல கேட்டுக்கு மனமில்லை.

இளவரசி கேட், தன் கணவருக்கும் ஹரிக்கும் இடையில் சமரசம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும், ஹரியிடம் கடினமாக நடந்துகொள்வதை நிறுத்துமாறும், ஹரியை மன்னிக்குமாறும் தன் கணவரை வலியுறுத்துவதுபோல் தெரிவதாகவும், அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தன் மனைவியை கஷ்டப்படுத்த வில்லியம் விரும்பமாட்டார். ஆனாலும், ஹரியிடம் மீண்டும் அன்பாக பழகமாட்டேன் என்றே அவர் அடம்பிடிப்பதாகவும் தெரிகிறது. என்றாலும் கேட்டும் விடுவதாக இல்லையாம்.

ஆகவே, தன் குடும்பத்துடன் இணைய ஹரிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதைச் செய்ய இப்போதைக்கு ஒருவரால் மட்டுமே முடியும். அது இளவரசி கேட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

Leave a Reply