TamilsGuide

உள்ளூராட்சி மன்ற  தேர்தல் ஒத்திவைப்பு –  நாளை தீர்ப்பு

உள்ளூராட்சி மன்ற  தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் 9, 2023 அன்று நடத்தத் தவறியமை குறித்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களின் தீர்ப்பு நாளை (22) காலை ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மூலம் அறிவிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே , உள்ளூராட்சி மன்ற  தேர்தலை  மார்ச் 9, 2023 அன்று  நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் , பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி நிதி ஒதுக்கப்படமையினால்  தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment