• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனது ஆட்சியில் ஊழல் மோசடிக்கு இடமில்லை

இலங்கை

”ஊழலை ஒழித்து பொருளாதார சுதந்திரத்தை உருவாக்குவதற்கு ஜக்கிய மக்கள் கூட்டணி முன்னெடுத்துள்ள புதிய பாதையில் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான கருத்தாய்வு மாநாடு
தேசிய தொழில் வல்லுநர்கள் பேரவையினால் நேற்று கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது” பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் சிக்கி இருக்கின்ற நாட்டை மீட்டெடுப்பதற்கு திறமையும் உள்ள சிறந்த குழு என்னிடம் இருக்கின்றது.

இதில் ஊழல் மோசடிக்கு எந்த ஒரு இடமும் இல்லை. கொள்முதல் முறைகளையும் மோசடியான அரச கொடுக்கல் வாங்கல் முறைகளையும் தவிர்த்து, ஊழலை அடியோடு இல்லாத செய்யும் பொருளாதார சுதந்திரத்தை வெற்றி கொள்ளும் பணியில்
அனைவரும் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

மனிதாபிமான முதலாளித்துவத்தையும், சமூக ஜனநாயகத்தையும் ஒன்றோடு ஒன்று இணைக்கவேண்டும். அதன் ஊடாக ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டை அதிகரித்து நாட்டை வளமிக்கதாக மாற்றமுடியும்.

அதன் பிரதிபலனின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு நாம் இந்தக் குழுவோடு இணைந்து கொள்ளமுடியும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply