• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆபீஸ் லேப்டாப்பை சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தும் 90% பணியாளர்கள் - ஆய்வில் தகவல்

90% தொழிலாளர்கள் தங்கள் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளை தனிப்பட்ட வேலைகளுக்கே பயன்படுத்துகின்றனர் என்று சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது சைபர் செக்யூரிட்டி பிரச்சனைகளை உருவாக்கும் என்று ESET தெரிவித்துள்ளது.

ESET நடத்திய ஆய்வில், பணியாளர்களில் பெரும் பகுதியினர் தங்கள் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளில் 18+ உள்ளடக்கத்தை பார்ப்பது, இணைய சூதாட்டத்தில் ஈடுபடுவது, தடை செய்யப்பட்ட டார்க் வெப் தளங்களை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆய்வில் பதில் அளித்த தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு (63%) பேர் "டார்க் வெப்" தளங்களை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவதாகவும் 17% பேர் தினமும் டார்க் வெப் தளங்களை பயனபடுத்துவதாகவும் தெரிவித்தனர். பெண்களை விட ஆண்களே அதிக அளவில் டார்க் வெப் பயன்படுத்துகின்றனர்.

சைபர் செக்யூரிட்டி பிரச்சனைகள் இருந்தாலும், அலுவலக மடிக்கணினிகளில் தங்களது தனிப்பட்ட செயல்பாடுகளை கண்காணிப்பது தங்களது தனியுரிமையை மீறும் செயல் என்று மூன்றில் ஒருவர் (36%) கருத்து தெரிவித்தனர்.

ஐந்தில் ஒருவர் (18%) தங்கள் அலுவலக மடிக்கணினிகளில் இணையப் பாதுகாப்பு மென்பொருள் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.
 

Leave a Reply