TamilsGuide

யாழில் வேலைக்குச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

யாழில் வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த  32 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றுக் காலை வேலைக்கு சென்ற நிலையில், பணியிடத்தில்  நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார் எனவும், இதனையடுத்து  சக ஊழியர்கள்  அவரை கோப்பாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை அவர் ஏற்கனவே  உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment