TamilsGuide

ஜனனம் அறக்கட்டளையின் மாபெரும் இலவச புலமைப் பரிட்சை கருத்தரங்கு

ஜனனம் அறக்கட்டளையின் ”கல்விக்கு கரம் கொடுப்போம்”செயற்திட்டத்தின் ஊடாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச பரிட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (18) கொழும்பு மாவத்த  சென்ந் அந்தோணிஸ் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.  இதன்போது  கருத்தரங்கில் சிறப்பாகச்  செயற்பட்ட  மாணவர்களுக்கு ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனினால் கேடயங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இக் கருத்தரங்கில் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஜனனம் அறக்கட்டளையின் வடகொழும்பு முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டமானது நாடு முழுவதும்  நீண்ட காலமாக தமது  கல்விப் பணியை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment