TamilsGuide

அர்ஜுன மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன் -அநுர

நான் தேர்தலில் வெற்றிபெற்றால்,  மத்திய வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் ”என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்துள்ளார்.

கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  அனுராதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது ரணில் விக்கிரமசிங்க என்னை அவமதித்து பேசினார். அநுர இதற்கு பதிலளியுங்கள் என ரணில் கூறும் பொழுது அவரது வார்த்தை தவறியதை அனைவரும் அவதானித்திருந்தனர்.

மேலும் நாங்கள் அவரை அவமதிக்க விரும்பவில்லை. தேசிய மக்கள் சக்தியில் இருந்து இந்த நாட்டை ஆள்வதற்கு யார் இருக்கின்றனர் என ரணில் உட்பட அனைவரும் கேட்கின்றனர்.
ஏனைய கட்சிகளிலும் யார் இருக்கின்றனர்? நான் ஒரு பதில் தருகிறேன்.

மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள,
சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற அர்ஜுன மகேந்திரா இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்.
மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தான்
இந்த கொடுக்கல் வாங்கலுக்கு ஆலோசனை வழங்கியதாக
கோப் குழுவிடம் அர்ஜூன மகேந்திர பதில் அளித்தார்.

அர்ஜுனன் மகேந்திரனை அழைத்து வருவதே எனது முக்கிய வேலை. இதை வாய்வார்த்தையில் கூறாது செயலில் காண்பிக்க விரும்புகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment