TamilsGuide

கூலிக்கு பின் கைதி-2 ஐ உடனடியாக தொடங்கும் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜின் இயக்குனர் பயணம் மாநகரம் படம் மூலம் தொடங்கியது. மிகச் சிறப்பான கதைக்களத்துடன் மாநகரம் படத்தை கொடுத்து அனைத்து தரப்பினரின் புருவத்தையும் உயர்த்த செய்திருந்தார்.

இவர் திரையுலகில் வந்த சில வருடங்களிலேயே கமல், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து மாஸ்டர், விக்ரம், லியோ, கைதி-1 படங்களை இயக்கினார். தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து `கூலி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டில் நடிகர் கார்த்தியை வைத்து `கைதி' எனும் படத்தை லோகேஷ் இயக்கிருந்தார். இந்த படம் வெளிவந்த போது கைதி-2 ம் பாகம் உருவாகும் என அறிவித்தனர்.

ஆனால், லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து உச்ச நடிகர்கள் படம் இயக்குவதில் பிசியாக இருந்ததால் கைதி-2 படம் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து `பான் இந்தியா' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் லோகேஷ் கனகராஜ் கூலி படம் முடிவடைந்த பிறகு கைதி 2-ம் பாகத்திதை தான் இயக்குவார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
 

Leave a comment

Comment