TamilsGuide

ஈழத்தின் பிரசித்தி பெற்ற செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாஇ தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்று , இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.தேர்த்திருவிழாவில் பெறுந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், பல அடியவர்கள் காவடிகள் , கற்பூர சட்டிகள் எடுத்தும்.அங்க பிரதிஸ்ட்டை அடித்தும் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.

இதேவேளை , செல்வச்சந்நிதி முருகனுக்கு இன்று காலை தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளை திங்கட்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும் மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment