TamilsGuide

பெருந்தோட்ட பகுதிகளில் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் புதிய அரசாங்கத்தில் மீள ஆரம்பிக்கப்படும் – திகாம்பரம்

தேர்தல்களில் துரோகம் இழைத்தவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடிவழங்குவார்கள் என தமிழ்முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் இதனை தெரிவித்துள்ளார்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு இன்று இடம்பெற்றது

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை புதிய அரசாங்கத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
 

Leave a comment

Comment